நெட் தேர்வை மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தாக்கத்தின் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தேர்வுகள் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் குறிப்பிட்ட நாளில் தேர்வு நடத்த முடியாததால் நெட் தேர்வை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலனை கருதி நெட் தேர்வை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் நெட் தேர்வு எழுதுவதற்கு 15 நாட்களுக்கு முன் நெட் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment