ஓபிஎஸ் சகோதரர் பெரியகுளத்தில் உயிரிழப்பு!
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் உடன்பிறந்த சகோதரர் ஓ.பாலமுருகன் இன்று பெரியகுளத்தில் காலமானார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தம்பி ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் காலமானார்
புற்று நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஓ.பாலமுருகன் திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்று நேற்று இரவு வீடு திரும்பிய நிலையில் இன்று காலமானார்.
ஓ.பாலமுருகன், ஓ.ராஜா, ஓ.சுந்தர் என ஓ.பன்னீர்செல்வத்திற்கு மூன்று தம்பிகள். ஒரு அண்ணன் இறந்துவிட்டார். மேலும் நான்கு சகோதரிகள் உள்ளனர். இதில் இரண்டாவது தம்பியான ஓ.பாலமுருகன் உடல் நலகுறைவால் இன்று காலமாகியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து தற்பொழுது கிளம்பி பெரியகுளம் சென்று கொண்டிருக்கிறார்
No comments:
Post a Comment