எதிர்க்கட்சி தலைவர் யார்? அதிமுகவில் அடுத்த பூகம்பம்!
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து திமுக ஆட்சி உறுதியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ஏற்கெனவே அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என சர்ச்சை எழுந்தது. பல குழப்பங்களுக்கு பின் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
தற்போது அதிமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் யார் என மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது. அதிமுக 66 சீட்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்களுடன் மே 7ஆம் தேதி கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களும் கட்டாயமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே தேதியில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின் சேலத்தில் உள்ள அவரது வீட்டில் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பண்ணன், அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். அப்போது, மே 7 கூட்டத்தின் அஜெண்டா பற்றி ஆலோசித்துள்ளனர்.
No comments:
Post a Comment