தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு
இந்திய அரசு இந்திய அஞ்சல் துறையானது தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. திறமையான கைவினைஞர்கள் முதுநிலை மேலாளர், மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை அலுவலகத்தில் பணியாற்றுவதற்கு வேலைவாய்ப்பினை அறிவித்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது M.V. மெக்கானிக், காப்பர் மற்றும் டின்ஸ்மித், பெய்ன்டர், டையர்மென், M.V. எலக்ட்ரிசியன், ஓட்டுநர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 36 காலிப்பணியிடங்கள் (Approximately) அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 26.05.2021 அன்றுக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 அறிவிப்புப்படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்த தேர்வில் வெற்றிப்பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
இதர விவரம்:
கல்வி தகுதி, வயது தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION-ஐ DOWNLOAD செய்து பார்க்கவும்.
விண்ணப்ப முறை:
அஞ்சல் (Offline)
M.V. மெக்கானிக், காப்பர் மற்றும் டின்ஸ்மித், பெய்ன்டர், டையர்மென், M.V. எலக்ட்ரிசியன் பணிக்கான விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: முதுநிலை மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.
ஓட்டுநர் பணிக்கான விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006.
தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
tamilnadupost.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
இந்த தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தி தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு விளம்பரத்தை சரிபார்த்த பிறகு விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment