முடிஞ்ச உதவிகளை செய்யுங்க: ராகுல் காந்தி வேண்டுகோள் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

முடிஞ்ச உதவிகளை செய்யுங்க: ராகுல் காந்தி வேண்டுகோள்

முடிஞ்ச உதவிகளை செய்யுங்க: ராகுல் காந்தி வேண்டுகோள்

டவ் தே புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்யும்படி, காங்கிரஸ் தொண்டர்களை, அக்கட்சி எம்.பி.

ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

அரபிக் கடலில் உருவாகியுள்ள டவ் தே என்ற புயல், வரும் 18-ம் தேதி குஜராத் மாநிலத்தில் கரையைக் கடக்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகம், கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில், மிக கன மழை பெய்யும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. புயல் பாதிப்புகளை சமாளிக்க, 100-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சமூக வலைதளமான டுவிட்டரில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
கேரளா, தமிழகம், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில், டவ் தே புயல் காரணமாக கன மழை பெய்து வருகிறது. கன மழை, புயல் ஆகியவற்றால், பாதிக்கப்படும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad