ஊரடங்கிலும் அடங்காத வாகன ஓட்டிகள்... அடக்கிய சாத்தூர் போலீஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, May 15, 2021

ஊரடங்கிலும் அடங்காத வாகன ஓட்டிகள்... அடக்கிய சாத்தூர் போலீஸ்!

ஊரடங்கிலும் அடங்காத வாகன ஓட்டிகள்... அடக்கிய சாத்தூர் போலீஸ்!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இதன் முக்கிய அம்சமாக அரசு அறிவித்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி காலை 10 மணிக்கு மேல் தேவையில்லாமல் சாலையில் சுற்றும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கிருஷ்ணன்கோவில், முக்குராந்தல் பகுதி, பேருந்து நிலையம், மதுரை பேருந்து நிறுத்தம், பைபாஸ் விளக்கு ஆகிய பகுதிகளில் சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணசாமி, சையது இப்ராஹிம், ராஜேஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் இன்று பாதுகாப்பு பணியை மேற்கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad