தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.165 கோடிக்கு மது விற்பனை..! அடிச்சி தூக்கிய மதுரை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 14, 2021

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.165 கோடிக்கு மது விற்பனை..! அடிச்சி தூக்கிய மதுரை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.165 கோடிக்கு மது விற்பனை..! அடிச்சி தூக்கிய மதுரை

தமிழகத்தில் முழு ஊரடங்கை ஜூன் 21ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்துக்கு தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

கொரோனா கட்டுக்குள் வந்திருந்தாலும் கோயம்புத்தூர், நீலகிரி திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு மேற்கண்ட 11 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது.

அதன்படி, இன்று முத்த மதுக்கடைகள் சில்லறை விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விருத்தாசலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் முண்டியடித்துக்கொண்டு மதுபாட்டில்களை வாங்கி சென்றதால் அரை மணி நேரத்தில் சரக்குகள் விற்று தீர்ந்தது இதனால் மது பிரியர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் ரூ.165 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.50 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad