மருத்துவமனைக்கு தனியாக சென்ற 3 வயது குழந்தை: காரணத்தை கேட்டா அசந்துடுவீங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

மருத்துவமனைக்கு தனியாக சென்ற 3 வயது குழந்தை: காரணத்தை கேட்டா அசந்துடுவீங்க!

மருத்துவமனைக்கு தனியாக சென்ற 3 வயது குழந்தை: காரணத்தை கேட்டா அசந்துடுவீங்க!


கொரோனாவின் இரண்டாவது அலையின் கோரப்பிடியில் சிக்கி இந்தியா சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசிகள் ஒருபுறம் போட்டாலும், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்ற விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நாகாலாந்து மாநிலத்தை சேர்ந்த 3 வயது குழந்தை ஒன்று செய்த செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் உள்ள ஜூன்ஹிப் போடோ மாவட்டத்தை சேர்ந்தவர் 3 வயது லிபாவி என்ற சிறுமி. இந்த சிறுமிக்கு திடீரென சளித்தொல்லை ஏற்பட்டுள்ளது.

இந்த கொரோனா காலகட்டத்தில் திடீரென சளிப் பிடித்ததால் விழிப்புணர்வுடன் யோசித்த சிறுமி, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். அவரது பெற்றோர் வயலில் வேலைக்கு சென்ற பின்னர் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று எண்ணிய சிறுமி, தானே முகக்கவசம் அணிந்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சிறுமி மட்டும் தனியே முகக்கவசம் அணிந்து வருவதை கண்ட மருத்துவர், அவரிடம் என்ன செய்கிறது என்று கேட்டு சிறுமிக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இது தொடர்பான தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நாகாலாந்து மாநில பாஜக இளைஞரணி தலைவர் பெஞ்சமின் எப்தோமி, சிறுமியின் விழிப்புணர்வை பாராட்டியதுடன் அவர் விரைவில் குணமடையவும் வாழ்த்தியுள்ளார். இதையடுத்து, இக்குழந்தையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad