இரண்டாம் டோஸ் மட்டும் போடுங்க.. அரசு புதிய உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

இரண்டாம் டோஸ் மட்டும் போடுங்க.. அரசு புதிய உத்தரவு!

இரண்டாம் டோஸ் மட்டும் போடுங்க.. அரசு புதிய உத்தரவு!



கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி போடும் தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் இரண்டாம் டோஸ் தடுப்பூசி மட்டும் செலுத்தும்படி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜூன் மாதம் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டிய 18 முதல் 44 வயது வரம்பிலானவர்களுக்கு மட்டும் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தும்படி அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

18 முதல் 44 வயது வரம்பிலானவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் பணிகளை தொடங்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த அறிவிப்பை டெல்லி அரசு வெளியிட்டுள்ளது.


இதன்படி, 18 முதல் 44 வயது வரம்பிலானவர்களில் மே மாதம் முதல் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இம்மாதம் இரண்டாம் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், போதிய அளவுக்கு தடுப்பூசிகள் இல்லை என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி எளிதாக கிடைப்பதில்லை. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, 18-44 வயது வரம்பிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad