ஐஏஎஸ் அதிகாரிகள் பல்க் டிரான்ஸ்பர்: ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 14, 2021

ஐஏஎஸ் அதிகாரிகள் பல்க் டிரான்ஸ்பர்: ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!

ஐஏஎஸ் அதிகாரிகள் பல்க் டிரான்ஸ்பர்: ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!


தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து, அரசு அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். குறிப்பாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை பார்த்து பார்த்து அவர் நியமனம் செய்து வருகிறார். எந்த துறைக்கு எந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கலாம் என்பதில் கூடுதல் கவனத்தையும் அவர் செலுத்தி வருவது அவரது நியமனத்தில் இருந்து தெரிகிறது.

பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பந்தாடப்படுவது வழக்கம்தான். முந்தைய அரசுக்கு நெருக்கமான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஓரம்கட்டப்படுவதும், தங்களுக்கு நெருக்கமாக உள்ள அதிகாரிகளுக்கு பதவி கொடுப்பதும் இயல்பாக நடப்பதுதான். நாடு முழுவதும் இப்படியான சூழல் நிலவி வரும் நிலையில், அதற்கு தமிழ்நாடு மட்டும் விலக்கல்ல.

ஆனால், தற்போதைய நிலவரப்படி அடுத்தடுத்து அதிகமாக அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசியல் நோக்கர்களிடம் விசாரித்த போது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிகாரிகள் மாற்றப்படும் பட்சத்தில் அந்த எண்ணிக்கை பெரிதாக இருக்காது. ஆனால், கடந்த 10ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொருவராக மாற்றப்பட்டு வருவதால் இந்த எண்ணிக்கை பூதாகரமாக தெரிகிறது என்கிறார்கள்.



தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆட்சியர்களாக இருந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் வெவ்வேறு துறைகளில் இயக்குனர், செயலாளர் உள்ளிட்ட பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. வெவ்வேறு துறைகளில் இயக்குனர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளில் இருந்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, நேற்று மட்டும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். 40 வயதுக்கும் குறைவானர்கள். நேற்றைய நியமனத்தில் மட்டுமல்ல இதற்கு முன்பும் கூட இளைஞர்களே பெருமளவில் ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், க்ளீன் ஆபிசர்ஸ் என்று பெயரெடுத்தவர்கள் முக்கியமான துறைகளிலும், மாவட்ட ஆட்சியர்களாகவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். முந்தைய ஆட்சியில் பல்வேறு காரணங்களுக்காக இவர்கள் ஓரம்கட்டப்பட்டு இருந்ததும் கவனிக்கத்தக்கது.

முன்னதாக, தலைமைச் செயலர், முதல்வரின் தனிப்பட்ட செயலர்களின் நியமனத்தில் ஸ்டாலின் காட்டிய மிஸ்டர் க்ளீன் அனுகுமுறையின் நீட்சியாக இவை பார்க்கப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக யார் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அந்த அரசின் நிர்வாகம் இருக்கும் என்பதால், துடிப்பான இளம் அதிகாரிகளை தேடிப்பிடித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆட்சியர்களாகவும், முக்கியத்துறைகளிலும் நியமித்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



கறைபடியாத கரங்கள் அதிகாரிகளாக இருக்கும்பட்சத்தில் அந்த அரசின் நிர்வாகம் சிறப்பாகவும் மக்கள் நலன் சார்ந்தும் இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தங்களது பார்வையை முன்வைக்கின்றனர். தற்போது கொரோனா பணியில் அரசு தீவிரம் காட்டி வந்தாலும் இதன் பின்னர் செய்ய வேண்டிய பல்வேறு பணிகளுக்கு க்ளீன் அதிகாரிகள் என்று பெயரெடுத்தவர்களே சரியாக இருப்பார்கள் என்பதால் ஸ்டாலினின் தேர்வு அவர்களாக இருக்கிறது என்று சுட்டிக்காட்டும் அவர்கள், அமைச்சர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலைகளுக்கு துணை போகாமல், எதுவாயினும் தன்னுடைய கவனத்துக்கு கொண்டு வரக் கூடிய அதிகாரிகளை நியமனம் செய்தால், கடந்த காலங்களை போல் அல்லாமல் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்படும் என்பதாலேயே ஸ்டாலினின் சாய்ஸ் அவர்களாக இருக்கின்றனர் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad