கோவையில் கொரோனா உச்சம் ஆனாலும் நோயைப் பரப்பும் காய்கறி கடைகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

கோவையில் கொரோனா உச்சம் ஆனாலும் நோயைப் பரப்பும் காய்கறி கடைகள்!


கோவையில் கொரோனா உச்சம் ஆனாலும் நோயைப் பரப்பும் காய்கறி கடைகள்!




தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் அனைத்து வகையான கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பால், குடிநீர் விநியோகம், நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



அதன்படி, கோவையில் வீடு தேடி வந்து காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதற்கு வார்டுக்கு 2 வாகனங்களை இயக்க மாநகராட்சி நிர்வாகம் உத்தரவு போட்டிருந்தது. ஆனால் ஒரு மண்டலத்துக்கு 10 வாகனங்கள் என்ற அடிப்படையில் 50 நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல் பல்வேறு வியாபாரிகளுக்கும் வியாபாரம் செய்ய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கோவையில் வியாபாரிகள் சிலர் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று வியாபாரம் செய்வதைத் தவிர்த்து தெருவோரங்களில் கடைகள் போல் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.

இதனால் பொதுமக்கள் கடைகள் போன்று உள்ள தள்ளுவண்டி வாகனங்களைத் தேடி வருகின்றனர். அதேபோல் வியாபாரிகளின் இந்தச் செயலால் தனிமனித இடைவெளி கேள்விக் குறியாகியுள்ளது. கோவை காளப்பட்டி சாலைகளில் அரசின் திட்டத்தை வியாபாரிகள் கேள்விக் குறியாக்கியுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad