தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு; எத்தனை மணிக்கு வர வேண்டும்? - அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை வேகமாக குறைந்து வரும் சூழலில் இயல்பு நிலை விரைவில் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைப்பது தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. நோய்த்தொற்று முழுவதும் கட்டுக்குள் வந்த பின்னர், மாணவர்கள் வருகையை பற்றி ஆலோசித்து முடிவெடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரியர்கள் மட்டும் வரவழைக்கப் பட்டுள்ளனர். அதாவது, ரத்து செய்யப்பட்ட பொதுத்தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் போடும் பணி இருப்பதால் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சுழற்சி முறையில்
அதன்படி, 50 சதவீத ஆசிரியர்கள் வாரத்தில் மூன்று நாட்களும், எஞ்சிய 50 சதவீத ஆசிரியர்கள் அடுத்த மூன்று நாட்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா ஊரடங்கால் பல்வேறு ஊர்களில் சிக்கிக் கொண்டிருப்பதால் பணிக்கு திரும்ப முடியவில்லை என்று ஆசிரியர்கள் கூறுவதாக தெரிகிறது. இதன் காரணமாக ஒருசில ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment