நோட் பண்ணி வச்சுக்கொங்க, இந்த பையனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு: சச்சின் நம்பிக்கை!
கடந்த சில வருடங்களாகவே பலம் வாய்ந்த அணியாகத் திகழ்ந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் மோசமாகத் தோற்றால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும், ஒருநாள், டி20 மற்றும் டெஸ்டிற்கு தனித்தனி கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வழுத்து வருகிறது.
இந்நிலையில் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் குறித்து சச்சின் டெண்டுல்கர் பேசியுள்ளார். “கெய்ல் ஜேமிசன் மிகச்சிறப்பாகப் பந்துவீசுகிறார். பேட்டிங்களில் அதிரடி காட்டுகிறார். எதிர்காலத்தில் உலகின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக இவர் திகழ்வார் என நம்புகிறேன். கடந்த ஆண்டு நியூசிலாந்தில் இவரின் ஆட்டத்தைப் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. என்ன கவரக் கூடிய அளவிற்கு இவரின் ஆட்டம் இருந்தது” எனக் கூறினார்.
No comments:
Post a Comment