சொல்ற வரைக்கும் டாஸ்மாக் கடைகளை திறக்காதீங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

சொல்ற வரைக்கும் டாஸ்மாக் கடைகளை திறக்காதீங்க!

சொல்ற வரைக்கும் டாஸ்மாக் கடைகளை திறக்காதீங்க!

தமிழகத்தில், மறு உத்தரவு வரும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என, டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கை தளர்வுகளுடன், வரும் 14-ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மளிகை, இறைச்சிக் கடைகள் திறக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறப்பு பற்றி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதன் காரணமாக, தமிழக அரசிடமிருந்து மறு உத்தரவு வரும் வரை, டாஸ்மாக் கடைகள் இயங்காது என, டாஸ்மாக் மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அனைத்து மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை மூடுமாறு அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்களுக்கும், மாவட்ட மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு அடிக்கடி சென்று கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட மேலாளர்களும் விழிப்புடன் இருக்கவும், சட்ட விரோதமாக மதுபான விற்பனை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், இந்த ஊரடங்கு கால கட்டத்தில் எந்தவொரு கடைகளிலும் திருட்டுக்கு எந்த முயற்சியும் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட வேண்டும்.

அதிகார எல்லைக்கு உட்பட்ட எந்தவொரு கடைகளிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மாவட்டத்தில் உள்ள தடை அமலாக்க பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் நிறுவப்பட்டுள்ள அனைத்து சி.சி.டி.வி கேமராக்களும் சரியாக செயல்படுவதையும், அந்த காட்சிகள் பதிவு செய்யப்படுவதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் உறுதி செய்யவார்கள்.


இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad