திருப்பதி பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்: இனி ஈஸியா தரிசனம் செய்யலாம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 21, 2021

திருப்பதி பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்: இனி ஈஸியா தரிசனம் செய்யலாம்!

திருப்பதி பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்: இனி ஈஸியா தரிசனம் செய்யலாம்!


கொரொனா தொற்றால் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்தவர்களும், ஊரடங்கால் நிம்மதியிழந்தவர்களும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டால் வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வரவேண்டும் என திட்டமிட்டு வருகின்றனர். அதிலும் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து வர பக்தர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆந்திராவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று (ஜூன் 21) முதல் திருப்பதியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பஸ், கார் லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது.

ஊரடங்கு தளர்வு, கொரோனா பரவல் கட்டுப்பாட்டால் ஊரடங்கு நேரத்தில் வரமுடியாத பக்தர்கள் தற்போது திருப்பதிக்கு வர தொடங்கியுள்ளனர்.



இந்த நிலையில் “கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஏழுமலையான் கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad