கோவையில் போலீஸ் உதவியோடு திமுக ரவுடிசம்: மாஸ்க் போடச் சொன்னதால் அடி, உதை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 6, 2021

கோவையில் போலீஸ் உதவியோடு திமுக ரவுடிசம்: மாஸ்க் போடச் சொன்னதால் அடி, உதை!

கோவையில் போலீஸ் உதவியோடு திமுக ரவுடிசம்: மாஸ்க் போடச் சொன்னதால் அடி, உதை!


கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளையும் அதிமுக கூட்டணிதான் வென்றுள்ளது. எனினும் மாநிலத்தை ஆளும் கட்சி என போலீசார் உதவியோடு திமுகவினர் முரடர்களை போல் நடந்து கொள்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை வடவளி அருகில் உள்ள பிஎன் புதூர் பகுதியில் நோய்த்தடுப்பு பணியில் மாவட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் திமுக அலுவலகம் முன்பு நின்று கொண்டு இருந்த அக்கட்சியினரிடம் முககவசம் அணியும்படி மாநகராட்சி ஊழியர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

மாஸ்க் போடச் சொன்னதற்கு ஆத்திரம் அடைந்த திமுக நிர்வாகி பாக்கியராஜ், நோய்தடுப்பு பணியில் ஈடுபட்டுவந்த மாநகராட்சி பொறியாளர் ராஜேஷ் என்பவரை மிகவும் கீழ்த்தரமாகப் பேசியுள்ளார். தொடர்ந்து பொறியாளர் ராஜேஷ் மீது தாக்குதலும் திமுக பிரமுகர் நடத்தியுள்ளார்.

இந்த சம்பவம் அனைத்தும் வீடியோவாக பதிவாகியுள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்தின்போது அங்கிருந்து

சாய்பாபா காலனி போலீசார் திமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் அவர்களிடம் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர். இதனால் மக்கள் பணி மேற்கொள்ளும் முன்கள பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad