இந்த விஷயம் மட்டும் நடந்துச்சு, அப்புறம்; பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 26, 2021

இந்த விஷயம் மட்டும் நடந்துச்சு, அப்புறம்; பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

இந்த விஷயம் மட்டும் நடந்துச்சு, அப்புறம்; பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!









தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. இதனை திறம்பட நடத்துவதற்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் பாடநூல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் கல்வி சேனல் மற்றும் யூ-டியூப் மூலம் பாடம் கற்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸ்-அப் மூலம் உரிய வழிகாட்டுதல்களை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு, தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad