ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி.. அரசே இப்படி பண்ணலாமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, June 5, 2021

ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி.. அரசே இப்படி பண்ணலாமா?

ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி.. அரசே இப்படி பண்ணலாமா?


கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீட்டுக்கே நேரடியாக விநியோகிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்தது. இந்நிலையில், அடுத்த வாரம் முதல் டெல்லியில் ரேஷன் பொருள் டோர் டெலிவரிக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த ஓரிரு தினங்களில் ரேஷன் பொருட்களை டெல்லி முழுவதும் பொதுமக்களின் வீட்டுக்கே நேரடியாக டோர் டெலிவரி செய்ய டெல்லி அரசு தயாராக இருந்தது. இதனால் 72 லட்சம் ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள்.

ஒன்றிய அரசின் பரிந்துரைப்படி ‘முக்கிய மந்திரி கர் கர் ரேஷன் யோஜனா’ என்ற பெயரை நீக்கி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் ரேஷன் பொருட்களை டெலிவரி செய்ய கேபினட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதிலேயே ஒன்றிய அரசின் பிரச்சினைகள் தீர்ந்துவிட்டது.

இருப்பினும், ரேஷன் பொருள் டோர் டெலிவரி திட்டத்தை அமல்படுத்துவதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநர் நிராகரித்துவிட்டார். இத்திட்டத்துக்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கவில்லை எனவும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் காரணம் காட்டப்பட்டுள்ளது. சட்டப்படி இதுபோன்ற திட்டத்துக்கு ஒன்றிய அரசின் அனுமதி பெறத்தேவையே இல்லை” என்று தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad