யோகிக்கு பாஜகவில் நெருக்கடி.. சொந்த கட்சியிலேயே கடும் விமர்சனம்!
உத்தரப் பிரதேசத்தில் கொரோனா சூழல் மோசமாக உள்ளதாகவும், மாநில அரசு இன்னும் பாடம் கற்கவில்லை எனவும் ஆளும் பாஜகவை சேர்ந்தவர்களே விமர்சித்துள்ளனர். இது உத்தரப் பிரதேச பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே கொரோனாவை உத்தரப் பிரதேச அரசு கையாளும் விதத்தை சில பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். இந்த வரிசையில் பாஜக மாநில செயற்குழு உறுப்பினரான ராம் இக்பால் சிங்கும் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, “கொரோனா முதல் அலையிடம் இருந்து மாநில சுகாதார துறை எந்தவொரு பாடத்தையும் கற்கவில்லை. இதன் விளைவாக இரண்டாம் அலையில் ஏராளமானவர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
No comments:
Post a Comment