அரசு தேர்வுகளில் இனி நேர்முகத் தேர்வு இல்லை - மாநில அரசு அதிரடி - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 27, 2021

அரசு தேர்வுகளில் இனி நேர்முகத் தேர்வு இல்லை - மாநில அரசு அதிரடி

அரசு தேர்வுகளில் இனி நேர்முகத் தேர்வு இல்லை - மாநில அரசு அதிரடி



ஆந்திர மாநிலத்தில், குரூப் 1 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கான தேர்வில் இனி நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஆட்சேர்ப்பு தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஆந்திர பொதுச் சேவை ஆணையம் மூலம் குரூப் 1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளில் ஆட்சேர்ப்புக்கான நேர்முகத் தேர்வை தவிர்ப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.



இந்நிலையில், குரூப் 1 உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளின் ஆட்சேர்ப்புக்கான தேர்வுகளில், நேர்முகத் தேர்வு நடத்தப்படாது என்றும், மாறாக, எழுத்துத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஆந்திர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படாது.

No comments:

Post a Comment

Post Top Ad