மதுபிரியர்களுக்கு ஷாக்; டாஸ்மாக் கடைகளில் அதிரடி நடவடிக்கை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த மே 21ஆம் தேதி புதிய உச்சமாக 36 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகினர். அதன்பிறகு தினசரி புதிய பாதிப்புகள் தொடர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. நேற்றைய தினம் 17 மாவட்டங்களில் கோவிட்-19 தொற்று திடீரென அதிகரித்துள்ளது. இருப்பினும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் நிலைமை கட்டுக்குள் வரும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஜூன் 14ஆம் தேதி கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கு மது விற்பனை செய்யும் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டது.
No comments:
Post a Comment