தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு? கலங்க வைக்கும் களநிலவரம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 30, 2021

தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு? கலங்க வைக்கும் களநிலவரம்!

தமிழகத்தில் மீண்டும் கடும் ஊரடங்கு? கலங்க வைக்கும் களநிலவரம்!


தமிழகத்தில் கோவிட்-19 தொற்றின் இரண்டாவது அலை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. அதன்பிறகு தினசரி புதிய பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வந்தன. மே 21ஆம் தேதி யாரும் எதிர்பார்த்திராத வகையில் புதிய உச்சமாக 36,184 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து புதிய பாதிப்புகள் தொடர் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் பாதிப்புகளை விட 300 முதல் 400 வரை எண்ணிக்கையில் குறைவாக பதிவாகி வந்தது.


இந்நிலையில் நேற்று முன்தினம் 4,512 என்ற அளவில் இருந்த புதிய பாதிப்புகள், நேற்று 4,506ஆக காணப்பட்டது. அதாவது வித்தியாசம் வெறும் 6 என்பது அதிர்ச்சியடைய வைக்கிறது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதே காரணம் என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad