ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளி திறப்பு: அரசுக்கு புதிய கோரிக்கை!
தமிழ்நாட்டில் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் என்னென்ன தளர்வுகள் அறிவிக்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிப்பார்.
பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
தெலங்கானா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கல்லூரிகள், பள்ளிகள் திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவிலும் கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் மற்ற மாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் கல்வி நிறுவனங்கள் விரைவில் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
No comments:
Post a Comment