இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, June 25, 2021

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது!

இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது!


கொரோனா தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில், டாஸ்மாக் கடைகளைத் திறக்கக் கூடாது என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில், அமலில் உள்ள ஊரடங்கு வரும் 28-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் சில தளர்வுகளுடன், அடுத்த மாதம் 5ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் துணிக் கடைகள், வணிக வளாகங்கள், நகைக்கடைகளையும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களைத் தவிர மற்ற பகுதிகளில் உடற்பயிற்சிக் கூடங்கள் 50 சதவிகித நபர்களுடன் வழக்கமான நேரத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad