முதல்வர் மகன் உதயநிதிக்கு இப்படி ஒரு ஆசையா?: சேலம் மக்களிடம் சொன்னார்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 13, 2021

முதல்வர் மகன் உதயநிதிக்கு இப்படி ஒரு ஆசையா?: சேலம் மக்களிடம் சொன்னார்!

முதல்வர் மகன் உதயநிதிக்கு இப்படி ஒரு ஆசையா?: சேலம் மக்களிடம் சொன்னார்!

தமிழ்நாடு முதல்வர் அறிவித்த 4 ஆயிரம் ரூபாயில், முதல் தவணை வழங்கப்பட்ட நிலையில்,
2ஆம் தவணை 2 ஆயிரம் ரூபாய் இன்னும் இரண்டு நாட்களில் வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ்,11 சட்டமன்றத் தொகுதியில், 10 லட்சத்து 49 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நேரடியாகச் சென்று, அரிசி வழங்கி வருகிறார்.

அதன் ஒரு பகுதியாகச் சேலம் வடக்கு, ஏற்காடு, கெங்கவல்லி, ஆத்தூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிக்குச் சென்று அரிசி வழங்கினார். அதைத் தொடர்ந்து சேலம் மேற்கு தொகுதியில் உள்ள மக்களுக்கு முதற்கட்டமாக 350 நபர்களுக்கு இன்று அரிசி வழங்கினார்.

இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளனர்.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது:
இந்தியாவிலேயே கொரோனாவில் இருந்து மீண்ட முதல் மாநிலமாகத் தமிழ்நாடு மாற வேண்டும். அதற்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 4 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதன் இரண்டாம் தவணை 2 ஆயிரம் ரூபாய் இன்னும் 2 நாட்களில் வழங்கப்படும்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை கலந்துகொண்டு நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் உண்டியல் பணம் மற்றும் பொதுமக்கள் நிவாரணம் என முதலமைச்சர் நிவாரண நிதிக்குச் சேலம் மாவட்டத்திலிருந்து மட்டும் 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. உதவி வழங்கிய அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad