தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: ஸ்டாலின் பேசியது என்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 21, 2021

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: ஸ்டாலின் பேசியது என்ன?

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம்: ஸ்டாலின் பேசியது என்ன?



எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்னைகளுக்கும் மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும் என, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில், இன்று, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. தமிழக முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு, தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இது என்பதால், அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகமான, அண்ணா அறிவாலயத்தில், தி.மு.க. - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசனைக் கூட்டம், அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க.,வைச் சேர்ந்த 125 சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
சட்டப்பேரவையில், எதிர்க்கட்சியினர் எழுப்பும் கேள்விகளுக்கும், பிரச்னைகளுக்கும் மூத்த உறுப்பினர்கள் கவனமுடன் பதிலளிக்க வேண்டும். பேரவையில் சிறப்பாக செயல்படுவதற்கு, உறுப்பினர்கள் துறை வாரியாகவும், தொகுதி வாரியாகவும் தரவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தற்போது பெற்றிருப்பது மாபெரும் வெற்றி அல்ல. அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், மாபெரும் வெற்றியை பெறும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad