கட்டுக்குள் கொரோனா - ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து! முதலமைச்சர் அதிரடி
மத்திய பிரதேச மாநிலத்தில், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து, ஞாயிற்றுக் கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கை ரத்து செய்து, அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார்
இந்தியாவில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, தற்போது பெரும்பாலான மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில், சமூக வலைதளமான ட்விட்டரில், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் ஞாயிற்றுக் கிழமைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. மாநிலத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது. தினசரி சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
No comments:
Post a Comment