தமிழகத்தில் மீண்டும்; சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!
தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தினசரி புதிய பாதிப்புகள் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள தமிழக மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் முகாம்களில் குவியும் மக்களால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்காலிகமாக தடுப்பூசி போடும் பணிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில் தடுப்பூசி இருப்பு மற்றும் இறக்குமதி தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்துள்ள தகவல் மிகுந்த ஆறுதலை அளித்துள்ளது. முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் பெரியமேட்டில் உள்ள மத்திய தடுப்பூசி கிடங்கில் சுகாதாரத்துறை அமைச்சர் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தை பொறுத்தவரை இதுவரை 1,46,39,940 தடுப்பூசிகள் வந்துள்ளன.
No comments:
Post a Comment