சிறப்பு ரயில்களின் நேரம் மாற்றம்; தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த மே 21ஆம் தேதிக்கு பின்னர் தினசரி புதிய பாதிப்புகள் தொடர் சரிவை சந்தித்து கொண்டிருக்கின்றன. நேற்று புதிதாக 4,512 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 6,013 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 118 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 39,335 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பொது போக்குவரத்திற்கு அனுமதி
இந்த சூழலில் கடந்த 28ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த புதிய தளர்வுகளில் 27 மாவட்டங்களில் பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையிலும் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகளால் வெளியூர் பயணங்களின் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் செல்லும் ரயில் பயணிகள் அதிகரித்துள்ளனர். இதேபோல் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. விமான பயணங்களுக்கு பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து பெரிதும் உதவிகரமாக இருக்கிறது.
No comments:
Post a Comment