அதிகாரிகள் விட்ட டோஸ், அரண்டு போன சேலம் மக்கள்: விதி மீறிய கடைகளுக்கு அபராதம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, June 7, 2021

அதிகாரிகள் விட்ட டோஸ், அரண்டு போன சேலம் மக்கள்: விதி மீறிய கடைகளுக்கு அபராதம்!

அதிகாரிகள் விட்ட டோஸ், அரண்டு போன சேலம் மக்கள்: விதி மீறிய கடைகளுக்கு அபராதம்!


கொரோனா இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் விதமாகத் தமிழக அரசு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இந்த சூழலில் ஜூன் 7ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தரவுகளுடன் கூடிய ஊரடங்கைத் தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி சேலம் செவ்வாய்பேட்டை லீ பஜார் பால் மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு பொதுமக்கள் கூட்டமாக தங்களுக்கான பொருட்களை வாங்க இன்று குவிந்தனர்.

இந்த சூழலைப் பயன்படுத்தி அரசு உத்தரவை மீறி திறக்கப்பட்டு பட்டு 2 டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் அதிக மக்களுடன் விற்பனை நடைபெற்று வந்தது. இதனை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று இரண்டு கடைகளுக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மீண்டும் இதுபோன்று அரசு உத்தரவை மீறும் பட்சத்தில்

சீல் வைத்துக் காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதுபோல் சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாநில அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு விதிமுறை மீறிய கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொருட்களை வாங்குவதற்கு அதிக தூரம் பயணித்து வந்த மக்களையும் கண்டறிந்து அவர்களையும் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad