லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனாலும் பிச்சை எடுக்கும் கொடுமை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, June 15, 2021

லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனாலும் பிச்சை எடுக்கும் கொடுமை!

லட்சக்கணக்கில் பணம் இருக்கு.. ஆனாலும் பிச்சை எடுக்கும் கொடுமை!




ஈரோடு கச்சேரி வீதியை சேர்ந்தவர் ராமானுஜம். இவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு நகர கூட்டுறவு வங்கியில் தனது சேமிப்பு பணமான 5 லட்ச ரூபாயை முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்த மாதத்திலிருந்து மாதந்தோறும் இதற்கு 5 லட்ச ரூபாய்க்கு வட்டி தொகை பணம் பெற்று வந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதம் வரை வட்டிப் பணம் பெற்று வந்த நிலையில் தற்போது நகர கூட்டுறவு வங்கியில் இவரது 5 லட்ச ரூபாய் பணத்திற்கு வட்டி பணம் தராமல் வங்கியின் ஆவணங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே உரிய வட்டி பணம் தரப்படும் என வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் தற்போது கொரோனோ ஊரடங்கு காலம் என்பதால் அவரது உறவினர்களிடம் வீடுகளுக்குச் சென்று தனது வாழ்வாதாரத்தை நிவர்த்தி செய்து வருகிறார் ராமானுஜம்.

சில நேரங்களில் தனது உணவுத் தேவைக்காக பிச்சை எடுத்தும் சாப்பிட்டும் வருகிறார். இதுதொடர்பாக நகர கூட்டுறவு வங்கியை தினமும் அணுகி வங்கி ஊழியர்களிடம் மன்றாடி கேட்டு வருகிறார். ஆனால் வங்கி நிர்வாகம் உரிய முறையான ஆவணங்கள் இல்லாமல் வட்டிப் பணம் தர இயலாது என கை விரித்து விட்டனர்.

இதனால் அவர் அழுக்குச் சட்டையுடன் பித்து பிடித்து மனநலம் குன்றியவர் போல் வீதியில் சுற்றி வருகிறார். முதலீட்டாளரை பிச்சை எடுக்க வைக்கும் நகர கூட்டுறவு வங்கியின் செயல், பார்ப்பவர்களின் மனதை கவலை கொள்ளச் செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad