கங்கையில் மீண்டும் மிதக்கும் பிணங்கள்.. தொடரும் அவலம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, June 13, 2021

கங்கையில் மீண்டும் மிதக்கும் பிணங்கள்.. தொடரும் அவலம்!

கங்கையில் மீண்டும் மிதக்கும் பிணங்கள்.. தொடரும் அவலம்!

சில வாரங்களுக்கு முன் கங்கை நதியில் பிணங்கள் மிதந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கங்கை நதிக்கரையில் ஏராளமாக பிணங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நதியில் பிணங்கள் வீசப்படுவதை தடுக்க நதிக் கரையோரங்களில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த காவல்துறைக்கு உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், மீண்டும் கங்கை நதியில் மூன்று பிணங்கள் மிதந்து வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னவுஜ் - ஹர்தோய் எல்லைப் பகுதியில் கங்கை நதியில் ஒரு பெண்ணின் உடல் உள்பட மூன்று பிணங்கள் மிதந்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கங்கையில் மிதந்து வந்த மூன்று பிணங்களும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. பட்னாபூர் காட் அருகே பிணங்கள் மிதந்து வந்ததாக கன்னவுஜ் போலீஸ் எஸ்.பி பிரசாந்த் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad