இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கிடைக்க இதை செய்ய வேண்டும்: ரேஷன் கார்டில் முக்கிய மாற்றம்? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 23, 2021

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கிடைக்க இதை செய்ய வேண்டும்: ரேஷன் கார்டில் முக்கிய மாற்றம்?

இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கிடைக்க இதை செய்ய வேண்டும்: ரேஷன் கார்டில் முக்கிய மாற்றம்?


திமுக தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த வாக்குறுதி திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமாக இருந்தது.
முதற்கட்டமாக கொரோனா நிவாரணமாக குடும்பத்துக்கு ரூ. 4000, ஆவின் பால்விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும், அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் ஆகியவற்றை அமல்படுத்தியவாறே இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றிவிட்டால் குடும்ப தலைவிகளின் நம்பிக்கையை திமுக ஏறக்குறைய பெற்றுவிடும்.

தற்போது, பொதுமக்களிடம் இருந்தும், செய்தியாளர்களிடம் இருந்தும், எப்போது குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை கிடைக்கும்? என்ற கேள்விகள் பரவலாக வைக்கப்படுகின்றன. அண்மையில், செய்தியாளர்களை சந்தித்த உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, '' இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நிதிநிலையை கருத்தில்கொண்டு உரிய நேரத்தில் முதலமைச்சர் அறிவிப்பார்'' என தகவல் கூறினார்.

அதனை தொடர்ந்து, இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு ''தேர்தல் வாக்குறுதியில் சொல்லாததையும் நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் ஐந்தாண்டுக் காலம் ஆட்சிபுரிய மக்கள் அனைவரும் வாக்களித்து தேர்ந்தெடுத்துள்ளனர் ; ஆனால் கட்டாயம் செய்வோம். கட்டாயம் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும்'' என கூறினார்.

அதற்கான அறிவிப்பை எதிர்பார்த்துள்ள குடும்பத்தலைவிகளுக்கு எல்லோருக்கும் ரூ.1000 உரிமை தொகை கிடைக்குமா? ரேஷன் கார்டில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமா? என்ற குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகள் பெயர் மட்டுமின்றி புகைப்படமும் இருந்தால் மட்டுமே ரூ. 1000 கிடைக்கப்பெறும் என்ற தகவல் பரவலாக எழுந்துள்ளது. இதனால், பலரும் தங்களது ரேஷன் கார்டுகளை எடுத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு விரைகின்றனர். ஆனால், தமிழக அரசிடம் இருந்து அதுபோன்ற தகவல்கள் அதிகாரபூர்வமாக வரவில்லை. ஆகையால், அரசின் அறிவிப்பு வரும் வரை குடும்ப தலைவிகள் காத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஒருவேளை குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என்ற பெயரில் மாற்றம் செய்ய வேண்டும் என்றாலோ அல்லது குடும்ப தலைவியின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாலோ எளிமையாக ஆன்லைன் கோரிக்கை மூலம் செய்து முடிக்கலாம்.

வழிமுறைகள்:

* அரசின் அதிகாரபூர்வ இந்த https://www.tnpds.gov.in வலைத்தளத்துக்கு செல்லுங்கள்

* பயனாளர் நுழைவு என்பதை தேர்வு செய்யுங்கள்

* இப்போது ஓபன் ஆகும் பக்கத்தில் பதிவு செய்யப்பட்ட உங்களது செல்போன் எண்ணை பதிவிட்டு, கீழே இருக்கும் கேப்ட்சா குறியீடை சரியாக கொடுத்துவிட்டு பதிவு செய்ய வேண்டும்.

* இப்போது தோன்றும் பக்கத்தில் குடும்ப உறுப்பினர்கள் என்பதை தேர்வு செய்தால், குடும்ப தலைவர் பெயர் உட்பட உறுப்பினர்களின் பெயர்கள் காண்பிக்கப்படும்.

* குடும்ப தலைவர் பெயரில் மற்றும் புகைப்படத்தில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அட்டை பிறழ்வுகள் என்பதை கிளிக் செய்யவும்.

* அட்டை பிறழ்வுகள் கிளிக் செய்த பின்னர் புதிய கோரிக்கை என்பதை தேர்வு செய்த பின்னர் குடும்ப தலைவர் உறுப்பினர் மாற்றம் என்பதை கிளிக் செய்து புகைப்படம் மற்றும் பெயரையும் மாற்றிக்கொள்ளலாம். அனைத்தையும் சரியாக முடித்த பின்னர் ஓகே கொடுத்தால் உங்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment

Post Top Ad