ஊரடங்கில் முக்கியத் தளர்வு: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அனுமதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

ஊரடங்கில் முக்கியத் தளர்வு: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அனுமதி!

ஊரடங்கில் முக்கியத் தளர்வு: ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அனுமதி!

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு சவுதி அரேபியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ள அந்நாட்டு அரசு, ஆகஸ்ட் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தைக் காட்டினால்தான் பொது மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்படுவர் என்றும் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாது என்று சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேசமயம், கொரோனா தொற்று அந்நாட்டில் குறைந்து வருவதால் பாதிப்புக்கு ஏற்றவகையில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சுற்றுலாத் தலங்களை சவுதி அரேபிய அரசு மீண்டும் திறக்கவுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 18 மாதங்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு மீண்டும் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படவுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கி சவுதி அரசு உத்தரவிட்டுள்ளது.


முன்னதாக, கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு பட்டியலில் உள்ள நாடுகளுக்கு தங்கள் நாட்டு குடிமக்கள் பயணம் மேற்கொள்ள சவுதி அரேபிய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி பயணம் மேற்கொண்டு திரும்பினால் அவர்களுக்கு 3 ஆண்டு காலம் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்படும் என சவுதி அரேபியா அறிவித்து உள்ளது. இந்த சிவப்பு பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பிரேசில், ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad