சொகுசு காரில் கடத்தல்: பொள்ளாச்சி வாகன சோதனையில் 2 ஆயிரம் கிலோ அரிசி, 2 கார் பறிமுதல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 27, 2021

சொகுசு காரில் கடத்தல்: பொள்ளாச்சி வாகன சோதனையில் 2 ஆயிரம் கிலோ அரிசி, 2 கார் பறிமுதல்!

சொகுசு காரில் கடத்தல்: பொள்ளாச்சி வாகன சோதனையில் 2 ஆயிரம் கிலோ அரிசி, 2 கார் பறிமுதல்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பகுதியில் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலைக்கடைகளில் பொதுமக்களுக்கு கட்டணமின்றி வழங்கப்படும் ரேஷன் அரிசியைக் கேரளா மாநிலத்திற்குக் கடத்தப்படுவதாகக் கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து அப்பகுதியில் வாகன தணிக்கையில் போலீஸ் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்துக்கிடமான சொகுசு காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். சோதனையில் அந்த சொகுசு காரில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

50 கிலோ எடை கொண்ட 21 பைகளிலிருந்த ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி மற்றும் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட கேரள மாநிலம் சித்தூரைச் சேர்ந்த சரவணன், சுபாஷ் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் பொள்ளாச்சி அருகே உள்ள ஆலாங்கிடவு பகுதியில் ஆனைமலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது டாட்டா சுமோ காரில் கடத்திவரப்பட்ட ஆயிரத்து 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்த போலீசார் கேரள மாநிலம் வண்ணாமடையைச் சேர்ந்த பாலாஜி, ஆரிஃப் என்ற இருவரைக் கைது செய்தனர்.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் சேகரிக்கப்படும் ரேஷன் அரிசியை காரில் கேரளாவுக்கு கடத்தி வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட ரேஷன் அரிசி மற்றும் கடத்தல் வாகனங்களை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad