கோவை-மங்களூரு சிறப்பு ரயில் 25-ஆம் தேதி தொடக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

கோவை-மங்களூரு சிறப்பு ரயில் 25-ஆம் தேதி தொடக்கம்!

கோவை-மங்களூரு சிறப்பு ரயில் 25-ஆம் தேதி தொடக்கம்!


கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் சூழலில், கோவை ரயில் சேவை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து வரும் 24ஆம் தேதி முதல் தினமும் காலை 11 மணிக்குப் புறப்படும்.

இந்த சிறப்பு ரயில் 6: 30 மணிக்குக் கோவைக்கு வந்து அடையும். கோவையிலிருந்து 25ஆம் தேதி காலை 6: 30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் அன்று மதியம் 1: 15 மணிக்கு மங்களூர் சென்றடையும். இந்த சிறப்பு ரயில் பாலக்காடு ஒத்தப்பாலம் சோரனூர் பரப்பாடி கோழிக்கோடு வடகரை தலச்சேரி கண்ணூர் பையனூர் காசர்கோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

அதேபோல் கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்த புதுடெல்லி ஹச்ரத்து நிஜாமுதீன் ரயில் நிலையத்துக்குக் கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வரும் 17ஆம் தேதி இரவு 7 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திங்கட்கிழமை மாலை 5: 30 மணிக்கு ஹஜ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் சென்றடையும்.





வரும் 20ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை 5: 15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் வியாழக்கிழமை காலை 3: 30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் ஆலுவா திருச்சூர் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, விஜயவாடா, வாரங்கள், நாக்பூர், போபால், ஜான்சி, குவாலியர், ஆக்ரா, மதுரா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad