ஸ்கூல் பசங்க விஷயத்துல பாலிடிக்ஸ் வேண்டாம் ப்ளீஸ்... ஜி.கே.வாசன் வேண்டுகோள்!
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு அருகே உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு பினனர் தமாகா தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களிடம் கூறியது::
தேர்தலுக்கு பிறகு முதன்முறையாக கட்சி நிர்வாகிகளை சந்திக்கின்றேன். 6 தொகுதிகளில் போட்டியிட்டோம். எங்களால் வெல்ல முடியவில்லை. இருந்த போதும் இயக்கத்துக்கு பலம் சேர்க்க வேண்டும்; புத்துணர்வு தர வேண்டும் என்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.
கொரோனா இரண்டாவது அலை மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனோவில் அரசியல் கூடாது என்பது எங்கள் கட்சியின் கருத்து. 100% இறப்பு இருக்கக் கூடாது. அதை அரசு உறுதி செய்ய வேண்டும். மூன்றாவது அலையை சமாளிக்க கூடிய அளவில் கட்டமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும்.
பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் தேர்தலில் அதிமுக தோல்வி, பின்னடைவு அடைய காரணம் என்று சிவி சண்முகம் கூறியுள்ளது குறித்து நான் எதுவும் கூற முடியாது. ஆனால் கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்திற்கு தகுந்தாற் போல் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் கடை மடை வரை செல்லவில்லை.. இதனால் 20 நாளுக்கு முன்னர் போட்ட முளை பயிர் முளைக்காமல் போய் உள்ளது. அரசு உடனடியாக கடை மடை வரை நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment