ஜூலை 31 வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு: புதிய தளர்வுகள் என்னென்ன? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

ஜூலை 31 வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு: புதிய தளர்வுகள் என்னென்ன?

ஜூலை 31 வரை தமிழ்நாட்டில் ஊரடங்கு: புதிய தளர்வுகள் என்னென்ன?



தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. பின்னர், கொரோனா பாதிப்பு சற்று குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து மாவட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஒரே மாதிரியான தளர்வுகள் அமலில் உள்ளன.
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கான தடை, தியேட்டர்களை திறப்பதற்கான தடை உள்ளிட்ட சில செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வருகிற 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஒவ்வொரு முறையும் ஊரடங்கில் தளர்வுகளையோ அல்லது கட்டுப்பாடுகளையோ விதிக்கும் போது, மூத்த அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், இதற்காக அமைக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்தே அறிவித்து வருகிறார்.


அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று ஊரடங்கு கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

தொடரும் கட்டுப்பாடுகள்

** மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக)

** மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து

** திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள்



** பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்

** பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள்

** பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்

** உயிரியல் பூங்காக்கள் உள்ளிட்டவைகள் இயங்க தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad