முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான ரூ.4 கோடி சொத்துகள் முடக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 16, 2021

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான ரூ.4 கோடி சொத்துகள் முடக்கம்!

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான ரூ.4 கோடி சொத்துகள் முடக்கம்!

பண மோசடி வழக்கில், மஹாராஷ்டிர முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு சொந்தமான 4.2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது.

மஹாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. உள்துறை அமைச்சராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனில் தேஷ் முக் மீது, மும்பை காவல் ஆணையர் பரம்பிர் சிங் பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார்.

அதில், மும்பபையில் உள்ள மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்களில் இருந்து மாதந்தோறும், 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரும்படி அனில் தேஷ் முக் வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து அமைச்சர் பதவியை அனில் தேஷ்முக் ராஜினாமா செய்தார். இவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால் அனில் தேஷ்முக் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தினர். அவர் மீது அமலாக்க துறையும் பண மோசடி வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி பல முறை சம்மன் அனுப்பியும் அனில் தேஷ்முக் ஆஜராகவில்லை.
இந்நிலையில், அனில் தேஷ்முக் குடும்பத்திற்கு சொந்தமான 4.24 கோடி ரூபாய் மதிப்பு சொத்துகளை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். அதில், ஒரு குடியிருப்பு கட்டடத்தின் மதிப்பு 1.54 கோடி ரூபாய் எனவும், இது மும்பையின் வோர்லி பகுதியில் உள்ளது. ராய்கார்க் மாவட்டத்தில் 2.67 கோடி மதிப்புள்ள நிலங்களும் முடக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்து உள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad