காஷ்மீர் என்கவுன்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, July 10, 2021

காஷ்மீர் என்கவுன்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் என்கவுன்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை


ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ராணிபோரா பகுதியில் உள்ள க்வாரிகம் என்ற இடத்தில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி, அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், 3 பயங்கரவாதிகளை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.உயிரிழந்த பயங்கரவாதிகள், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களை பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad