தமிழகத்தில் "சரக்கு" விலை ரூ.50 வரை உயர்கிறது! மதுப்பிரியர்கள் "ஷாக்"
தமிழகத்தில், டாஸ்மாக் மதுபானங்களின் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில், குவார்ட்டர் விலையில், 10 ரூபாய், ஆஃப் 20 ரூபாய், ஃபுல் 40 ரூபாய், பீர் விலை 10 ரூபாய் வீதம் என, மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் மதுபானங்களின் விலையை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட கால கட்டத்தில் ஏற்பட்ட வருவாயை ஈடுகட்ட இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, குறைந்த ரக மது வகைகளுக்கு 10 ரூபாயும், நடுத்தர ரக மதுபானங்களுக்கு 30 ரூபாயும், உயர் ரக மதுபானங்களுக்கு 50 ரூபாய் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது
No comments:
Post a Comment