இந்த 7 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்; திடீர் அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் தினசரி புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை ஏற்ற இறக்கங்களுடன் காணப்படுகிறது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்றே தெரிகிறது. நேற்று புதிதாக 2,433 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,745 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 34 பேர் பலியாகியுள்ளனர். தற்போது 22,897 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் ஏழு மாவட்டங்களில் திடீரென கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், இந்த மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
மிகத் தீவிர ஊரடங்கு
அவை கோல்பாரா, கோலாகத், ஜோர்ஹத், சோனித்பூர், பிஸ்வநாத், லகிம்பூர், மோரிகோவன் ஆகிய மாவட்டங்கள் ஆகும். இங்கு மிகத் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் சிவசாகர் மற்றும் திப்ருகார் ஆகிய மாவட்டங்கள் அடுத்த ஒருவாரத்திற்கு தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடுத்தர அளவிலான பாதிப்புகளைக் கொண்ட சிவசாகர், திப்ருகார், கோக்ராஜ்ஹர், பார்பேட்டா,
கட்டுப்பாடுகள் அறிவிப்பு
நல்பாரி, பக்சா, பஜாலி, கம்ருப், தாரங், நாகோவன், ஹோஜாய், தின்சுகியா, தீமாஜி, கச்சார், கரிம்கஞ்ச், கர்பி அங்லாங் ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 2 மணி முதல் காலை 5 மணி வரையும், பாசிடிவ் விகிதத்தில் முன்னேற்றம் கண்டிருக்கும் துப்ரி, கம்ரூப்(M), சவுத் சல்மாரா, மஜவுலி, போங்கைகோவன், சிராங், உடல்குரி, வெஸ்ட் கர்பி ஆங்லாங், திமா ஹசாவோ, சரைடியோ, ஹைலாகண்டி ஆகிய மாவட்டங்களில் மாலை 5 மணி முதல்
No comments:
Post a Comment