அரசுப் பணிகளுக்கு பொதுத் தகுதித் தேர்வு!
குடிமைப் பட்டியல் 2021 எனப்படும் ஐஏஎஸ் அதிகாரிகள் குறித்த மின் புத்தகத்தை ஒன்றிய பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், 2022ஆம் ஆண்டு முதல் மத்திய அரசுப் பணிகளுக்கு பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்றார்.
இளைஞர்கள் மீது பிரதமர் மோடி வைத்திருக்கும் அக்கறையின் பிரதிப்பே இந்த சீர்திருத்தம் என்று கூறிய அவர், நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்குச் சமமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காக இந்த முறை கொண்டு வரப்படுகிறது. பொது தகுதித் தேர்வை நடத்துவதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுடன் தேசிய ஆட்சேர்ப்பு முகமை அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றால் அரசுத் துறைகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளுக்குப் பதிலாக பொது தகுதித் தேர்வைத் தேசிய ஆட்சேர்ப்பு முகமை நடத்தும் என்றார்.அத்துடன், நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும். இது தொலைதூர பகுதிகளில் வாழும் தேர்வர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அப்போது அமைச்சர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment