தமிழ்நாட்டில் லைசென்ஸ் பெற 8 போடனுமா? அமைச்சர் பதில்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

தமிழ்நாட்டில் லைசென்ஸ் பெற 8 போடனுமா? அமைச்சர் பதில்!

தமிழ்நாட்டில் லைசென்ஸ் பெற 8 போடனுமா? அமைச்சர் பதில்!

கடந்த ஜூன் மாதம் ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கான விதிகளை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிட்டது. மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019இன்படி, அரசின் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயில்வோர், டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனங்களை ஓட்டி காட்ட தேவையில்லை என்ற புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.

புதிய விதிமுறைப்படி, பயிற்சியாளர் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்றவராக இருக்க வேண்டும். பயிற்சி பள்ளிகள் உரிய விதிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். இந்த பயிற்சி மையங்களில் வெற்றி பெறும் ஓட்டுனர்கள் உரிய சான்றிதழுடன் ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் சென்று வாகனம் ஓட்டி காட்டி 8 போடாமலேயே லைசென்ஸ் பெறலாம்.

இந்நிலையில், ஒன்றிய அரசின் உத்தரவை தமிழ்நாடு அரசு பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர்

ராஜகண்ணப்பன், லைசென்ஸ் வாங்குவதற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் எட்டு போட தேவையில்லை என்ற ஒன்றிய அரசின் உத்தரவு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

இந்த ஆலோசனைக்குப் பின்னரே இந்த முடிவை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், போக்குவரத்துத்துறையில் இடைத்தரகர்கள் இல்லாமல், ஊழல் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad