போலீசாருக்கு கட்டாயம் வாரவிடுப்பு: டிஜிபி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, July 30, 2021

போலீசாருக்கு கட்டாயம் வாரவிடுப்பு: டிஜிபி உத்தரவு!

போலீசாருக்கு கட்டாயம் வாரவிடுப்பு: டிஜிபி உத்தரவு!

விடுமுறை இல்லாமல் காவலர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து பணியில் இருப்பதால் எளிதில் நோய்வாய்ப்படுவதாகவும், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து பொது மக்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. விடுமுறை இல்லாததால் குடும்பத்திலும் பல்வேறு பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

இவற்றை கருத்தில் கொண்டு, காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களின் கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. அதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி, காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படாமலே இருந்தது.

இதனிடையே, சென்னை நீங்கலாக அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்பட வேண்டும். அதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், சரக டிஐஜிக்கள் கண்காணிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டில் உத்தரவிடப்பட்டது. ஆனாலும், அந்த உத்தரவானது சரியாக பின்பற்றப்படாமல் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், போலீசாருக்கு வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்று டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “போலீசார் தங்களது உடலை பேணிக்காக ஏதுவாகவும், தங்கள் குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடவும் வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு அளிக்கப்பட வேண்டும். வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் போலீசாருக்கு ஒய்வு தினத்தன்று பணியில் இருக்கும் போலீசாருக்கு மிகைநேர ஊதியம் வழங்க வேண்டும்.

காவல் ஆளிநர்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் போன்ற விஷேச நாட்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாட்களில் விடுமுறை வழங்கப்பட வேண்டும். தமிழக காவல்துறை சார்பாக பிறந்த நாள் மற்றும் திருமண நாள் வாழ்த்து செய்தி மாவட்ட/ மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட ஆளிநர்களுக்கு தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து மாநகர காவல் ஆணையாளர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் தவறாமல் செயல்படுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad