ஓபிஎஸ் கனவு அவ்ளோ தானா? சண்முகத்தை இறக்கி ஆழம் பார்க்கும் எடப்பாடி? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, July 6, 2021

ஓபிஎஸ் கனவு அவ்ளோ தானா? சண்முகத்தை இறக்கி ஆழம் பார்க்கும் எடப்பாடி?

ஓபிஎஸ் கனவு அவ்ளோ தானா? சண்முகத்தை இறக்கி ஆழம் பார்க்கும் எடப்பாடி?


பத்தாண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த அதிமுக தற்போது ஆட்சியைப் பறிகொடுத்து எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது. இருப்பினும் பெரியளவில் பாதிப்பு இல்லாமல் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது. இருப்பினும் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், சம்பத் உள்ளிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்தனர்.

அதிமுகவில் தடலாடியாக பேசுபவர்களில் முக்கியமானவர் சி.வி.சண்முகம். விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது, பாமகவுடன் கூட்டணி அமைத்தது என சி.வி.சண்முகத்துக்கு பாசிட்டிவான பாயிண்டுகளே அதிகம் இருந்தன. ஆனால் அவருக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. அதற்கு பக்கத்தில் உள்ள சில தொகுதிகளில் அவர் கை காட்டிய ஆள்கள் வெற்றி பெற்றனர். இந்நிலையில் தனது தோல்விக்கு காரணம் பாஜகதான் என சி.வி.சண்முகம் பேசியுள்ளார்.

சிறுபான்மையினர் ஓட்டுகளை இழந்து விட்டோம்!

விழுப்புரம் மாவட்டம், வானுாரில் ஒன்றிய அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரான சண்முகம் பேசினார். “அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கூட்டணி கணக்கு சரியில்லை. நாம் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் தோல்வியை சந்தித்தோம். அவர்கள் கூட்டணியால், சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழந்து விட்டோம். விழுப்புரம் தொகுதியில், சிறுபான்மையினர் ஓட்டுகள் 20 ஆயிரம் உள்ளன. ஆனால் நாம் 14 ஆயிரம் ஓட்டுகளில் தொகுதியை இழந்தோம்” என தோல்வி குறித்து பேசினார் சண்முகம்.


மேலும் அவர், “திமுக மக்களை ஏமாற்றி, பொய்யான வாக்குறுதிகளைக் கூறி வெற்றி பெற்றுள்ளது. வரும் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் சுறுசுறுப்புடனும், ஒற்றுமையுடன் இருந்து செயல்பட வேண்டும். துரோகிகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது. விசுவாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

எடப்பாடியின் திட்டமா இது?

No comments:

Post a Comment

Post Top Ad