திறந்தது மாசாணி அம்மன் கோயில் கதவுகள்: கோவை மக்கள் மகிழ்ச்சி!
தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமிநாசினி அடித்து பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நோய்த் தொற்று அதிகமாக ஏற்பட்டதால் அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 25ஆம் தேதி முதல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டது.
தற்போது கொரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திறக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment