தமிழகத்தில் தாமரையை மலர செய்தவருக்கு கிடைத்தது சிம்மாசனம்! எல்.முருகன் சாதித்தது என்ன?
தமிழகத்தில் தாமரையை மலரச் செய்த தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகனுக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்கி பா.ஜ.க., மேலிடம் அழகு பார்த்துள்ளது.
தமிழகத்தில், பா.ஜ.கவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நேரத்தில், பா.ஜ.க தலைவராக நியமிக்கப்பட்டவர் எல்.முருகன். தலைவராக நியமிக்கப்பட்ட போது முருகன் எடுத்துக் கொண்ட உறுதிமொழி, தமிழக சட்டமன்றத்தில் பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் அலங்கரிப்பார்கள் என்பது தான்.
ஆனால் எல்.முருகனின் கனவு ஒருபோதும் பலிக்காது என்றும், அது பகல் கனவாகவே போகும் என்றும் அரசியல் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தான் கொண்ட இலக்கை உறுதியாக ஏற்றுக் கொண்டு நடைபயணம் மேற்கொண்டார் எல். முருகன்.
குறிப்பாக அவர் நடத்திய வேல் யாத்திரையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. தமிழகம் முழுவதும் வேல் யாத்திரையை பிரபலப்படுத்தினார். இதனால் கட்சி பெயர் மூலை முடுக்கெல்லாம் சென்றது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் தனது இலக்கில் குறியாக இருந்தார் எல். முருகன்.
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தசஷ்டி கவசம் தொடர்பாக தவறான சித்தரிப்பு குறித்து கண்டனம் தெரிவித்த பா.ஜ.க தலைவர் எல்.முருகன் அதை தமிழகத்தின் தீவிர பிரச்னையாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றார். அதன் விளைவாகவே வேல் யாத்திரை தமிழ்நாடு முழுவதும் ஓங்கி ஒலித்தது.
வேல் யாத்திரைக்கு பல கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தாலும், காவல் துறை அனுமதி மறுக்கப்பட்ட பிறகும் கூட தடையை மீறி திருத்தணியில் யாத்திரையை தொடங்கினார் பா.ஜ.க தலைவர் முருகன். அன்று தொடங்கி 30 நாட்கள் தொடர்ந்து வேல் யாத்திரை ஒவ்வொரு மாவட்டத்திலும் அரங்கேற்றப்பட்டது. மேலும் வேல் யாத்திரையை சிறு அசம்பாவிதம் நடைபெறாமல் கொண்டு சேர்த்தார்.
No comments:
Post a Comment