இந்த ராசி குழந்தைகள் படிப்பிலும், புத்திசாலித்தனத்திலும் திறமையாக இருப்பார்கள்!
மேஷம்: கற்றுக்கொள்ள ஆர்வம் அதிகம்
செவ்வாய் கிரகம் ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசி குழந்தைகள் ஆற்றல் மிக்கவர்கள், தைரியமுள்ளவர்கள். இதன் காரணமாக அவர்கள் மிகவும் அவர்கள் மிகச் சிறந்த கற்றல் திறனைக் கொண்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு பிரச்சனையிலிருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்வது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
குழந்தை பருவத்திலிருந்தே சரியான முறையில் வளர்க்கப்பட்டால், அவர்கள் வாழ்வில் நல்ல வெற்றியை அடைய முடியும். படிப்பில் மிகவும் பொறுப்பானவர்களாக இருக்கும் இவர்கள், எந்த ஒரு அவசர விசயங்களிலிருந்து விலகி இருப்பார்கள்.
ரிஷபம் ராசி குழந்தைகள் கடின உழைப்பாளிகள்
சுகம், ஆடம்பர வாழ்க்கையைத் தரக்கூடிய சுக்கிரனை ராசி பகவானாக கொண்ட ரிஷப ராசியினர் மிகவும் செல்வாக்கு உள்ளவர்கள். மிகவும் நம்பகமானவர்களாக இவர்கள் கடின உழைப்பாளிகள் மற்றும் சில நோய் கொண்டவர்கள்.
குழந்தை பருவத்திலிருந்தே சரியான முறையில் வழங்கப்பட்டால், இவர்களின் சிறந்த கல்வியால் தங்களுடைய பொன்னான எதிர்காலத்தை பெற்றிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த குழந்தைகள் ஒரு நல்ல சூழலைப் பெற்றால், படிப்புகள் மிகச்சிறப்பாக பெறுவார்கள்.
சுக்கிர கிரக செல்வாக்கினால் இவர்கள் அதிகம் சர்ச்சையில் சிக்காமல், மிகவும் அமைதியாகவும் பொறுமையுடனும் எந்த விஷயங்களையும் செய்வார்கள்.
கடகம் : கல்வியில் திறமையானவர்கள்
மனோகாரகன் எனும் சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியினர் மிகவும் பயம், கூச்ச சுபாவமும், வெட்கப்படுபவர்கள். மற்றவர்களை விட அமைதியாக இருக்கும் இவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புவார்கள். இவர்களின் திறமையின் காரணமாக இவர்களின் கல்வியிலும் சிறப்பாக விளங்குவார்கள்.
கல்வி, கேள்வியில் சிறந்து விளங்குவதால் ஆசிரியர்களுக்கு மிகவும் பிடித்த மாணவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைவிட இவர்கள் வித்தியாசமாக செயல்படுவார்கள்.
கன்னி :
ஞானம், புத்திசாலித்தனம், பேச்சில் திறமையைத் தரக்கூடிய புதன் கிரகம் ஆளக்கூடிய கன்னி ராசியை சேர்ந்த குழந்தைகள் புதனால் அறிவில் சிறந்து விளங்குவர்.
கல்வியில் மிக சுட்டியாக இருக்கும் இவர்கள் மிகச்சிறந்த புத்திசாலிகள். புத்தியை பயன்படுத்தி படிப்பில் முதலிடம் பெறுவார்கள்.
புதன் கிரகத்தின் செல்வாக்கின் காரணமாக, குழந்தைகள் தங்கள் குறிக்கோள்களை சரியாக செய்து முடிப்பார்கள்.
No comments:
Post a Comment