பெருசா சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் அதிமுக; சி.வி.சண்முகம் சூப்பர் தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, July 12, 2021

பெருசா சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் அதிமுக; சி.வி.சண்முகம் சூப்பர் தகவல்!

பெருசா சர்ப்ரைஸ் கொடுக்கப் போகும் அதிமுக; சி.வி.சண்முகம் சூப்பர் தகவல்!



தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதிமுக தோல்வியை தழுவிய போதிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. இந்த சூழலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதற்கு பாஜக உடன் வைத்த கூட்டணி தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கூறியது பரபரப்பை கிளப்பியது. இதனால் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுவிட்டதோ என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கூட்டணி தொடரும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெளிவாக கூறிவிட்டனர்.

சர்ச்சை நாயகன் சிவி சண்முகம்

இருப்பினும் தான் கூறியது சொந்த கருத்து என்றும், அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும் சி.வி. சண்முகம் கூறினார். மேலும் அவர் மீது கட்சி மேலிடம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது சர்ச்சையானது. புகழேந்திக்கு ஒரு நியாயம், சி.வி. சண்முகத்திற்கு இன்னொரு நியாயமா என்ற கேள்விகளை அரசியல் பார்வையாளர்கள் முன்வைத்தனர்.

உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை

அதற்கும் அதிமுக பதிலளிக்கவில்லை. எனவே சி.வி. சண்முகத்தை அரவணைத்து செல்லவே அக்கட்சி விரும்புவது வெட்ட வெளிச்சமானது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் மற்றும் கிளியனூரில் ஒன்றிய கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சி.வி. சண்முகம்,

அதிமுகவிற்கு மிகப்பெரிய வெற்றி

வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டுவிடும். எனவே தொண்டர்கள் யாரும் சோர்வடையாமல் களப் பணியாற்றுங்கள். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளிலும் அதிமுக வெற்றி பெற்று திமுகவின் வெற்றி ஒரு மாயை என்று நிரூபிக்க வேண்டும். இதற்காக நாம் கடினமாக உழைக்க வேண்டும். மக்கள் நம் கழகம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதால் தான்,

No comments:

Post a Comment

Post Top Ad